மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கே மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் முதுநிலை மருத்துவ மாணவி பாலி யல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக்கல் லூரியின் பணியாளர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட சிலர் மீதான பிடியை சிபிஐ இறுக்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று சந்தீப் கோஷின் வீடு, ஆர்.ஜி.கே மருத்து வமனையின் தடயவியல் துறையின் டாக்டர் தேபாஷிஷ் சோமின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ் வழக்கில் தேபாஷிஷ் சோமும், சந்தீப் கோஷுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் இருவரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அதி காரிகள் கூறினர்.